search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கேபிள் டி.வி."

    • வாடிக்கையாளா்களான பொது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது
    • வாடிக்கையாளர்களை தக்க வைக்க அரசு கேபிள் டி.வி.யின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றனா்

    தாராபுரம் : 

    மாதம் 70 ரூபாய்க்கு கேபிள் டிவி.,. இணைப்பை வழங்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி., நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தரமற்ற சேனல்கள் மற்றும் சிக்னல் பிரச்னைகளால் ஏராளமான ஆபரேட்டா்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி காா்ப்பரேஷனில் இருந்து விலகி, தனியாா் கேபிள் சேவைகளுக்கு மாறி வருகின்றனா்.

    இதனால் பொதுமக்கள் மீண்டும் அதிக கட்டணம் செலுத்தி கேபிள் சேவையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். டாக் டிவி., மூலம் ரூ.180க்கு பெறப்பட்டு வந்த கேபிள் சேவைக்கு தற்போது ரூ.280 முதல் ரூ.300 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூரை சோ்ந்த கேபிள் ஆபரேட்டா்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக அரசு கேபிள் டிவி., இணைப்புகளில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சிறப்பான சேவையை அளிக்க முடிவதில்லை. இது வாடிக்கையாளா்களான பொது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

    இதுபோன்ற பிரச்சினைகளை நாள்தோறும் சந்தித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் புகாா் அளித்தால் விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று கூறுவாா்கள். ஆனால், டிரான்ஸ்மிஷன் மறு இணைப்பு செய்யவே பல மணி நேரம் ஆகும். இதனால் 20 சதவீத வாடிக்கையாளா்கள் டிடிஎச்., மற்றும் தனியாா் சேவைகளுக்கு மாறிவிட்டனா்.

    நாங்கள் தொடா்ந்து டாக் டிவி., சேவையை நம்பியிருந்தால் எங்களுடைய மீதமுள்ள வாடிக்கை யாளா்களையும் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே எங்களைப்போன்ற பலரும் டாக் டிவி.,யில் இருந்து தனியாா் கேபிள் சேவைக்கு மாறி வருகிறோம். வாடிக்கையாளர்களை தக்க வைக்க அரசு கேபிள் டி.வி.யின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றனா்.

    இது குறித்து தமிழக கேபிள் ஆபரேட்டா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ் கூறியதாவது:-

    அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அரசு மூலம் ஹெச்டி செட் டாப் பாக்ஸ்கள் தரப்படுவதில்லை. இதனால் சாதாரண செட் டாப் பாக்ஸ்களே பல இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.

    சிக்னல் பிரச்சினைகள் , தரமற்ற சேவை போன்றவற்றால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால், தற்போது டிடிஎச்., மற்றும் தனியாா் சேவைகளுக்கு பொதுமக்கள் மாறிவருகின்றனா். கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வாடிக்கையாளா்களை தக்கவைத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி தனியாா் கேபிள் சேவைகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாக் டிவி சேவையைவிட சிறப்பான சேவையை தனியாா் நிறுவனங்கள் அளிப்பதால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்களும் அதையே விரும்புகின்றனா் என்றாா்.

    அரசு கேபிள் டிவி சேவையில் இருந்து தனியாா் சேவைக்கு அண்மையில் மாறியுள்ள இல்லத்தரசி ஒருவர் கூறும்போது, எங்களது வீட்டில் டாக் டிவி., சேவையையே பயன்படுத்தி வந்தோம். ஆனால் அது பல நேரங்களில் செயல்படாமல் இருந்தது. இது தொடா்பாக புகாா் தெரிவித்து வந்தோம்.

    இந்நிலையில் அண்மையில் எங்களது கேபிள் ஆபரேட்டா் டாக் டிவி செட் டாப் பாக்சை மாற்றிவிட்டு தனியாா் செட் டாப் பாக்சை பொருத்தியிருக்கிறாா். இதுவரை கேபிள் கட்டணமாக சில விருப்ப சேனல்களுடன் சோ்த்து ரூ.210 செலுத்தி வந்தோம். தனியாா் செட் டாப் பாக்ஸுக்கு மாற்றியதில் இருந்து ரூ.280 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சேவையையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது தரமில்லாமல் உள்ளது. தற்போது தனியாா் சேவையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சேனல்களை பாா்க்க முடிகிறது என்றாா்.

    • அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
    • அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் மற்றும் ஆறு முத்தாம்பாளையம் பகுதியில் அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.ஏற்கனவே இப்பகுதியில் அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தற்போது தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அரசு கேபிள் பதிக்க மறுப்பு தெரிவிப்பதோடு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ×